Pages

சனி, 25 டிசம்பர், 2010

ஆண்மையை பாதுகாக்கும் செவ்வாழை

எல்லோருக்கும் எளிதில் கிடைக்கும் வாழைப்பழம் நிறைய பலன்களை நமக்கு அள்ளித் தருகிறது. தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அஜீரணக் கோளாறு வராது.

மலச்சிக்கல், மூலநோயால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால் அந்த நோய்ப் பாதிப்பில் இருந்து படிப்படியாக விடுபடலாம்.

வயது ஆக ஆக எல்லோருக்கும் கண் பார்வை குறையத் தொடங்கிவிடும். அத்-த-கைய பாதிப்புக்கு ஆளானவர்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் வீதம் 21 நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கண் பார்வை படிப்படியாக தெளிவடையும்.

குறைவான உயிரணுக்கள் எண்ணிக்கை கொண்ட ஆண்கள், தினமும் ஒரு செவ்வாழைப்பழம் சாப்பிட்டு வந்தால், அவர்களது உயிரணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அதனால், எளிதில் குழந்தை பாக்கியமும் கிட்டும்.

வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரஸ்தாளி வாழைப்பழத்தை தண்ணீர் விட்டு கரைத்து மூன்றுவேளை உட்கொள்ள கொடுத்தால் போதும். அந்த பாதிப்பு உடனே நின்றுவிடும்.-Nellaisaral

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக